பாகிஸ்தானிலிருந்து கடத்தி வரப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பஞ்சாபில் பறிமுதல்!!
Read Time:1 Minute, 8 Second
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை பஞ்சாப் போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.
தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்த பஞ்சாப் போலீசார், பஞ்சாப் மாநிலம் டான் டரன் மாவட்டத்தில் வசிக்கும் மஞ்ஜிந்தர் சிங், ஹர்ப்ரீத் சிங், மேகர் சிங் என்ற மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 400 கிரம் எடையுள்ள ஹெராயினை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் எல்லையில் உள்ள போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு கொண்டவர்கள். மேலும் நாடு முழுவதும் போதை பொருட்களை விற்று வருபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Average Rating