ஆற்காடு அருகே மயக்க ஸ்பிரே அடித்து பெண்ணிடம் நகை பறிப்பு!!
ஆற்காடு அருகே உள்ள வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சுகன்னா (35). நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்–டாப் உடையணிந்த 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வெள்ளி கொலுசுக்கு பாலீஸ் போடுவதாக கூறினர். இதனை நம்பி சுகன்னா வீட்டுக்குள் சென்று கொலுசு எடுத்து வருவதாக சென்றார்.
வீட்டில் அவர் தனியாக இருந்தததை அறிந்த வாலிபர்கள் சுகன்னாவை தொடர்ந்து வீட்டுக்குள் சென்றனர். திடீரென சுகன்னாவின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்தனர். இதனால் அவர் மயங்கி விழுந்தார்.
அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு வாலிபர்கள் தப்பி சென்று விட்டனர்.
மயக்கம் தெளிந்த பின்னர் செயின் திருடு போனதை அறிந்த சுகன்னா திடுக்கிட்டார். இதுகுறித்து அற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.
Average Rating