திருச்சூர் அருகே சில்மிஷம் செய்த வாலிபரை ஆட்டோவில் விரட்டி பிடித்த மாணவி!!

Read Time:2 Minute, 12 Second

4488252f-bd84-4615-a380-d2cf5cbef7b5_S_secvpfதிருச்சூர் அருகே உள்ள புன்னையூர்குளம் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி திருச்சூரில் இருந்து குருவாயூர் செல்லும் அரசு பஸ்சில் கல்லூரிக்கு சென்றார்.

அப்போது அந்த மாணவியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு வாலிபர் அந்த மாணவியிடம் சில்மிஷம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி வாலிபரை எச்சரித்தார். ஆனாலும் அந்த வாலிபரின் தொல்லை தொடர்ந்தது.

இதற்கிடையில் வடக்கே கோடு என்ற இடத்தில் பஸ் நின்றபோது அந்த வாலிபர் பஸ்சில் இருந்து இறங்கி சென்றுவிட்டார். தனக்கு வாலிபர் தொந்தரவு கொடுத்தது பற்றி அந்த மாணவி அதே பஸ்சில் பயணம் செய்த தனது தோழிகளிடம் கூறினார்.

தோழிகள் திட்டப்படி அந்த மாணவி அடுத்த பஸ் நிறுத்தத்தில் தோழிகளுடன் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். பிறகு அவர்கள் அனைவரும் ஒரு ஆட்டோவில் ஏறி வடக்கே கோடு சென்றனர். அங்கு ஒரு கடை முன்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் நின்றுகொண்டிருந்தார். உடனே அந்த மாணவியும் அவரது தோழிகளும் அவரை மடக்கி பிடித்தனர். அவருக்கு தர்ம அடியும் கொடுத்தனர். இதை பார்த்த அந்த பகுதி மக்களும் நடந்ததை தெரிந்துகொண்டு அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார்கள். பிறகு வடக்கே கோடு போலீசில் ஒப்படைத்தனர்.

அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவரது பெயர் முகமது (வயது 21). திருச்சூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண் நீதிபதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நீதிபதி பணியிடை நீக்கம்: இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவு!!
Next post 10 மாதத்தில் 5 முறை குழந்தை பெற்ற 60 வயது மூதாட்டி: ஊழலின் ஊற்றுக்கண் உ.பி – வில்லங்க மோசடி!!