தீபாவளிக்கு துணி எடுக்க முடியாததால் தற்கொலை
Read Time:1 Minute, 18 Second
தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகளுக்கு துணி எடுக்க முடியாததால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம், மானூர் அருகே உள்ள தெற்கு செழியநல்லூர் வாசக சாலையை சேர்ந்தவர் மனோகரன். கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் மனோகரனுக்கு சரியாக வேலை இல்லை. இதனால் வரவிருக்கும் தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகளுக்கு துணி எடுக்க முடியாமல் சிரமப்பட்டார். இந்நிலையில் மனோகரனிடம் அவரது குழந்தைகள் தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. இன்னும் துணி எடுக்க முடியவில்லையா என்று கேட்டனர். இதனால் வேதனையடைந்த மனோகரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மனோகரன் விஷம் குடித்து இறந்ததை கண்ட குடும்பத்தினர் கதறி அழுதனர்.