கற்பழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சாவு!!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டம், பிப்ரி கிராமத்தை சேர்ந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த மாதம் 25-ம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அந்தப் பெண்ணின் கணவரது நண்பரான தினேஷ் என்பவர் திடீரென வீட்டுக்குள் நுழைந்தார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அந்தப் பெண்ணை பலவந்தப்படுத்தி, கற்பழிக்க முயன்றார். அவரது ஆசைக்கு எதிப்பு தெரிவித்த அந்தப் பெண் தினேஷை எதிர்த்து கடுமையாக போராடினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ், வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை எடுத்து அந்தப் பெண்ணின் உடல் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடினார். உடல் முழுக்க தீப்பிடித்து வேதனையால் அலறித் துடித்த அவரது கூக்குரலைக் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டினர் ஓடோடி வந்தனர்.
எரியும் நெருப்பை அணைத்து அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து, குற்றவாளி தினேஷை போலீசார் கடந்த 27-ம் தேதி கைது செய்தனர். பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த அந்தப்பெண் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, தினேஷ் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த கற்பழிப்பு மற்றும் கொலைமுயற்சி வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
Average Rating