அண்ணாநகரில் அதிகாரி வீட்டில் 60 பவுன் நகை கொள்ளை!!

Read Time:2 Minute, 0 Second

3a9a4900-6779-4aef-9769-64ac762873ea_S_secvpfசென்னை அண்ணாநகர் கிழக்கு எச்.பிளாக் 8–வது தெருவில் வசித்து வருபவர் ரவி. தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா. இவர்களுடைய மகன் விஷ்ணு.

நேற்று காலை ரவி வேலைக்கு சென்று விட்டார். மகனை டென்னிஸ் பயிற்சிக்காக சுதா அழைத்து சென்றார். பின்னர் பகல் 12 மணி அளவில் சுதா வீடு திரும்பினார்.

வீட்டின் முன் பக்க கதவும், கிரீல் கேட் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்ற அவர் பீரோ திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த 60 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தன.

இதுபற்றி சுதா கணவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் அண்ணாநகர் போலீசுக்கு கொள்ளை குறித்து புகார் கொடுத்தார். போலீசார் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.

பட்டப்பகலில் அடுக்கு மாடி குடியிருப்பில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கணவன்– மனைவி இருவரும் வெளியே செல்வதை கண்காணித்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். கடந்த சில நாட்களாக நோட்டமிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என தெரிகிறது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.12 லட்சமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவனந்தபுரத்தில் கார்களில் சென்று பெண்களிடம் நகை பறிக்கும் கும்பல்: கண்காணிப்பு காமிராவில் சிக்கினர்!!
Next post ஓமலூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!