சுவிசில் புளொட் உறுப்பினர்கள் மீதான கொலைமுயற்சி வழக்கு மீண்டும் விசாரணைக்கு..
Read Time:1 Minute, 1 Second
சுவிசில் இவ்வருட மேதினமன்று புளொட் உறுப்பினர்கள் மீது புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி வழக்கு இன்று 29.10.2007 சூரிச் விசாரணை நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுக்கப்பட்டிருந்தது. நீதிமன்றில் பாதிக்கப்பட்ட புளொட் உறுப்பினர்களும் சந்தேக நபர்களான சுவிஸ் புலிப் பொறுப்பாளர் குலம் உட்பட புலியுறுப்பினர்கள் மூவரும் மற்றும் சந்தேகநபர்கள் சார்பான சாட்சியமும் ஆஐராகியிருந்தனர். சாட்சியத்தை செவிமடுத்த நீதிபதி பாதிக்கப்பட்ட புளொட் உறுப்பினர்களினதும் அவர்களது சட்டத்தரணிகளினதும் குறுக்கு விசாரணையை தொடர்ந்து விசாரணைகளை ஒத்தி வைத்தார்.