தேனி அருகே 3–ம் வகுப்பு மாணவனை கடித்து குதறிய வெறிநாய்!!
Read Time:51 Second
தேனி அருகே, போடி புதூரை சேர்ந்த முருகன் மகன் சுந்தரேஸ்வரன்(வயது7). தனியார் நடுநிலைப்பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக டி.வி.கே.கே நகர் பகுதியில் நடந்து சென்றார்.
அப்போது வெறிநாய் சுந்தரேஸ்வரன் முகத்தில் கடித்தது. கதறி அழுத சுந்தரேஸ்வரனை பார்த்த பொதுமக்கள் நாயை விரட்டினர். படுகாயம் அடைந்த சுந்தரேஸ்வரன் முதலுதவி சிகிச்சைக்குப்பின் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Average Rating