தஞ்சையில் மதுபாட்டிலில் ஆணுறை கிடந்ததால் பரபரப்பு!!

Read Time:1 Minute, 38 Second

b4b9bf45-8fd1-41e6-9c71-801534e89945_S_secvpfதஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் தஞ்சை கொண்டிராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கினார். அதனை அவர் திறந்து குடிக்க முயன்றபோது உள்ளே ஏதோ பொருள் கிடப்பது தெரிய வந்தது.

உடனே அவர் அதனை எடுத்து பார்த்தார். அப்போது அது ஆணுறை என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மதுவை குடிக்காமல் விற்பனையாளரிடம் காட்டினார். வேறு மதுபாட்டில் கொடுக்கும்படி கூறினார். அதற்கு விற்பனையாளர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த அழகர்சாமி கடைக்கு முன்பு மதுவை கொட்டி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

மதுவில் ஆணுறை கிடந்த சம்பவம் மதுபிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுகுடிப்பது கேடு என்று தெரிந்து குடித்த போதிலும் இப்படி கவனகுறைவாக மதுவை தயாரித்து விற்பனைக்கு அனுப்புவது எந்த வகையில் நியாயம்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து இதுபோன்று மதுபாட்டில்கள் விற்பனைக்கு வருவதை தடுக்க வேண்டும் என்று சக மதுபிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீராங்கனை குற்றச்சாட்டு: காதல் புகாரில் இருந்து கைப்பந்து வீரர் விடுவிப்பு!!
Next post உடுமலை அருகே உயிருடன் இருப்பவர் இறந்ததாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள்!!