தண்டையார்பேட்டை அருகே பஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது!!
Read Time:51 Second
கோயம்பேட்டில் இருந்து எண்ணூர் நோக்கி மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. தண்டையார்பேட்டை அருகே பஸ்நிறுத்தம் இல்லாத பகுதியில் வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏற கைகாட்டினார். ஆனால் டிரைவர் கணபதி நிறுத்தவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கற்களை வீசினார். இதனால் பயணிகள் பதட்டமானார்கள்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ஸ்டீபன், காசிமேட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
Average Rating