பாபநாசம், ரோமியோஜுலியட் புதுப்பட சி.டி.க்கள் தயாரித்த வாலிபர் கைது!!
சென்னையில் திருட்டு சி.டி.க்கள் விற்பனையை தடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி, கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் உத்தரவுப்படி, கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரம்பூர் பஸ்நிலையம் அருகே தனிப்படை போலீசார் ரோந்து சென்றபோது பெரிய பையுடன் நின்ற வாலிபரிடம் விசாரித்தனர்.
அவர் தவ்லத் ரகுமான் என்பதும், பையை சோதனை செய்தபோது சமிபத்தில் வெளியான பாபநாசம், ரோமியோ ஜுலியட் உள்ளிட்ட புதுப்பட சி.டி.க்கள் விற்பனைக்கு எடுத்து சென்றதும் தெரிந்தது.
மேலும் அவர் மாத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து கம்ப்யூட்டர், ரைட்டிங் எந்திரம் மூலம் புதுப்பட திருட்டு சி.டி.க்கள் தயரித்து சென்னை மற்றும் வெளியூர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தவ்லத் ரகுமானை போலீசார் கைது செய்தனர். சி.டி. தாயரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர்கள், ரைட்டிங் எந்திரம் மற்றும் ஆயிரத்து 200 புதுப்பட சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.
Average Rating