தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட போலீஸ் கான்ஸ்டபிள்!!
Read Time:1 Minute, 22 Second
மத்தியபிரதேசத்தின் திக்கம்கர் மாவட்டத்தில், போலீஸ் கான்ஸ்டபிள் வீட்டு மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திக்கம்கர் மாவட்டம் ஓர்ச்சா பகுதியில் வசித்து வந்தவர் ராமாகண்ட் பண்டா(40). போலீஸ் கான்ஸ்டபிளான இவர், இன்று காலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது கண்டறியப்பட்டதாக ஒர்ச்சா காவல்நிலைய அதிகாரி திலிப் சிங் யாதவ் தெரிவித்தார்.
ராமாகண்ட்டின் மகள் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் பதிலளிக்காததால் பதறிப்போன அவர் ஓர்ச்சா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்ததும் அங்கே வந்த போலீசார் அவர் வீட்டின் கதவை உடைத்து, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating