கற்பழிப்பு வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்று தூக்கிட்டு தற்கொலை!!
Read Time:1 Minute, 6 Second
கற்பழிப்பு வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேகாலயா மாநிலத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் இன்று தூக்கில் பிணமாக தொங்கினார்.
மாநில ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த மதன் பாசுமட்டரி என்ற அந்த எஸ்.ஐ. ஷில்லாங் நகரில் உள்ள ரிசர்வ் போலீஸ் படையினர் குடியிருப்பில் ஒரு பெண்ணை கற்பழித்ததாக குற்றம்சாட்டப்பட்டு சமீபத்தில் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று தனது வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த உள்ளூர் போலீசார், அவரது பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating