5 கோல் அடித்த ஜெர்மனி வீரர் குளூசுக்கு `தங்க காலணி’
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடிப்பவர்களுக்கு தங்க ஷூ (காலணி) வழங்கப்படும். இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஜெர்மனி வீரர் குளூஸ் கோல் அடிப்பதில் முன்னணியில் இருந்தார். அரை இறுதி வரை அவர் 5 கோல்கள் அடித்தார். ஆனால் துரதிஷ்டவசமாக ஜெர்மனி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை.
குளூசை தாண்டி மற்ற வீரர்கள் யாரும் கோல் அடிக்கவில்லை. 5 கோல்கள் அடித்ததே தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச கோலாகும். இத னால் 5 கோல்கள் அடித்த குளூசுக்கு தங்க காலணி வழங்கப்பட்டது.
உலக கோப்பையில் தனிப்பட்ட வீரர் 5 கோல் அடிப்பது மிக குறைவாகும். 1962ம் ஆண்டுக்கு பிறகு இப்படி குறைவான கோலை தனிப்பட்ட வீரர் அடித்துள்ளார். குளுஸ் கோஸ்டாரிகா, ஈக் வடார் அணிகளுக்கு எதிராக 2 கோலும், அர்ஜென்டினாவுக்கு எதிராக ஒரு கோலும் அடித்தார்.
இந்த உலக கோப்பையில் 8 வீரர்கள் தலா 3 கோல்கள் அடித்து இருந்தனர்.