கோவை சரவணம்பட்டியில் மிட்டாய் கொடுத்து சிறுமியிடம் சில்மிஷம்: பெட்டிக்கடைக்காரர் கைது!!

Read Time:1 Minute, 59 Second

25d17ebd-324b-4b17-a262-e1b4b2e039c9_S_secvpfகோவை சரவணம்பட்டி அருகே உள்ள காந்திமா நகரை சேர்ந்தவர் கமலன் (வயது 65).

இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி மிட்டாய் வாங்குவதற்காக இவரது கடைக்கு வந்தார். அப்போது சிறுமியிடம் மிட்டாய்களை காட்டிய கமலன் ‘என்னுடன் வா, இந்த மிட்டாய்களை உனக்கு இலவசமாக தந்து விடுகிறேன்’ என கூறி சிறுமியை வீட்டின் பின்புறம் அழைத்து சென்றார். அங்கு திடீரென கமலன் அந்த சிறுமியிடம் ‘செக்ஸ்’ சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டவாறு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது, இங்கு நடந்ததை வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என கமலன் மிரட்டினார். ஒருவழியாக அவரிடம் இருந்து தப்பித்த சிறுமி வீட்டுக்கு அழுது கொண்டே சென்றார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாயார் கடைக்கு சென்ற போது என்ன நடந்தது? என கேட்க அவரிடம் நடந்த சம்பவங்களை சிறுமி கூறி அழுதார். அதைக்கேட்டு ஆவேசமடைந்த சிறுமியின் தாயார் இதுகுறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் கமலன் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டம் 2012–ன் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்பக்கூடல் அருகே அரச மரத்தில் அம்மன் உருவம் தெரிவதாக பரபரப்பு: கிராம மக்கள் பயபக்தியுடன் வணங்கினர்!!
Next post போலீசாரால் கற்பழிக்கப்பட்ட புதுவை சிறுமி திடீர் மாயம்!!