காதல் விவகாரத்தில் சமரசம் செய்து வைத்த எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல்: தந்தை–மகனுக்கு வலைவீச்சு!!
பண்ருட்டியை அடுத்த முத்தாண்டி குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் விஜயலட்சுமி. இளம்பெண்.
விஜயலட்சுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் என்ற வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனினும் அதையும் மீறி சிவராமகிருஷ்ணன்– விஜயலட்சுமி திருமணம் நடைபெற்றது. 2 பேரும் சென்னையில் வசித்து வந்தனர். ஆனால், அவர்களுக்கு கோவிந்தராஜ் தரப்பில் மிரட்டல் வந்தது. எனவே, காதல் ஜோடி சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன், ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி சுகந்தி ஆகியோரிடம் இதுபற்றி முறையிட்டனர்.
எனவே, அந்த காதல் ஜோடியையும், கோவிந்தராஜ் தரப்பினரையும் அழைத்து பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல் சுகந்தியும் சமாதான முயற்சி எடுத்தார். ஆனால், கோவிந்தராஜ் தனது நிலையில் பிடிவாதமாக இருந்து வீடு திரும்பி விட்டார்.
அதன் பிறகு அவரது ஆத்திரம் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் சுகந்தி மீது திரும்பியது. எனவே, அவர்கள் 2 பேருக்கும் கோவிந்தராஜும், அவரது மகனும் போனில் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுபற்றி முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜ் மற்றும் அவரது மகனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Average Rating