இளம்பெண்ணின் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்ட மாணவன் கைது!!
Read Time:1 Minute, 6 Second
ஒடிசாவின் ரஹாலா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண்ணின் ஆபாசப் படங்களை இணையதளத்தில் வெளியிட்ட 12-ஆம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.
அந்த பெண்ணுடன் நட்பாகவும், நெருக்கமாகவும் பழகி வந்த அந்த மாணவன், காலப்போக்கில் அந்தப் பெண்ணை தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளான். இதற்கு அந்த பெண் மறுத்ததால் அவளை ஆபாச கோணத்தில் எடுத்திருந்த புகைப்படங்களை இணைய தளங்களில் வெளியிட்டுள்ளான்.
இதைப்பற்றி தகவலறிந்த அந்தப் பெண்ணின் தந்தை, போலீசாருக்கு கொடுத்த தகவலின்பேரில் மாணவன் நேற்று கைது செய்யப்பட்டான். போலீசார் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர், நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
Average Rating