மகனின் குடிப்பழக்கத்தால் தாய் தற்கொலை!!
Read Time:1 Minute, 12 Second
கோவை வரதராஜபுரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி கலாமணி (வயது 45).
இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவரது மகன் ரங்கசாமி(23). இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. ரங்கசாமி அடிக்கடி தனது தாயிடம் மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.
இதனால் மனமுடைந்த கலாமணி நேற்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த ரங்கசாமி அதிர்ச்சியடைந்து தானும் விஷம் குடித்தார்.
பின்னர் அவர் சத்தம் போட்டார். அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கலாமணி இறந்து விட்டார். ரங்கசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating