அத்திப்பட்டில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை!!
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டை சேர்ந்தவர் சேகர் (வயது 30). காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் கப்பல் கட்டும் தளத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர் அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் நின்றார்.
அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி மின்சார ரெயில் வந்தது. திடீரென சேகர் ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவரது தலை துண்டாகி என்ஜினில் சிக்கியது. உடல் அங்கேயே விழுந்தது.
சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரெயில் சென்ற பின்னர் என்ஜினில் சிக்கிய தலை தண்டவாளத்தில் விழுந்தது. இது பற்றி ரெயில் என்ஜின் டிரைவர் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
ரெயில்வே போலீசார் விரைந்து வந்து தண்டவாளத்தில் கிடந்த சேகரின் துண்டான உடல், தலையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேகரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating