அரக்கோணத்தில் 4–ம் வகுப்பு மாணவன் கடத்தல்?: போலீஸ் விசாரணை!!
Read Time:59 Second
அரக்கோணம் மணியக்காரத் தெருவை சேர்ந்தவர் சங்கரன். சவுண்ட் சர்வீஸ் கடை உரிமையாளர். இவரது மகன் பரத் (9). இவர் ஜோதி நகரில் உள்ள தனியார் பள்ளியில் 4ம்வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவன் பரத் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர்கள் உதவியுடன் மகனை பல இடங்களில் தேடினர்.
எங்கு தேடியும் கிடைக்காததால் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவன் பரத்தை யாராவது கடத்தி சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating