கமுதி அருகே விவசாயி வெட்டிக்கொலை: மகன் ஆத்திரம்!!

Read Time:1 Minute, 52 Second

4353b59e-987b-4059-ab5c-c57d8a7724ed_S_secvpfராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள மண்டல மாணிக்கம் போலீஸ் சரகத்துக்குட்பட்டது மூலக்கரைப்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் முனியசாமி (வயது42), விவசாயி.

இவருக்கு நாகேஸ்வரி, மல்லேஸ்வரி என 2 மனைவிகள். அக்காள்–தங்கைகளான இவர்களில் நாகேஸ்வரி இறந்து விட்டார். இவருக்கு 4 குழந்தைகளும், மல்லேஸ்வரிக்கு ஒரு குழந்தையும் உள்ளனர்.

மது அருந்தும் பழக்கம் கொண்ட முனியசாமி தினசரி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

நேற்று இரவும் அவர், மது அருந்தி வந்து மனைவி மல்லேஸ்வரியிடம் தகராறு செய்தார். இதனை மகன் தம்பிதுரை (20) தட்டிக்கேட்டார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த தம்பிதுரை, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, தந்தையை வெட்டினார். படுகாயம் அடைந்த முனியசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், கமுதி போலீஸ் உதவி சூப்பிரண்டு சேக்முக் சேகர் சஞ்சை உத்தரவின்பேரில் மண்டல மாணிக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்–இன்ஸ்பெக்டர் கருப்பையா ஆகியோர் விரைந்து சென்று முனியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தொடர்ந்து தம்பிதுரையும் கைது செய்யப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தற்கொலை செய்த மாணவி உடல் இன்று பரிசோதனை: அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் குவிந்தனர்!!
Next post தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்: கல்லூரி மாணவி மனு!!