மேற்கு வங்காளத்தில் கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல்!!
Read Time:1 Minute, 14 Second
மேற்கு வங்காள மாநிலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் மீது மர்ம நபர்களால் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள நடியா மாவட்டத்தில் உள்ள புனித தாமஸ் தேவாலயம்தான் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இன்று தேவாலயத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், ஆலய பொருட்களை சூறையாடிவிட்டு தப்பிச் சென்றனர்.
தகவலறிந்த ஆலய நிர்வாகத்தினர், இது தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவாலயத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
ஆலயத்தில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் இல்லாததால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Average Rating