மாறியது காலம்: மாமனார் கொடுமை தாங்காமல் மருமகன் தற்கொலை!!
Read Time:1 Minute, 19 Second
மாமியார், நாத்தனார் கொடுமை தாங்க முடியாமல் பெண்கள் தற்கொலை செய்து கொண்ட காலம் போக, மாமனார் மற்றும் மைத்துனர்களின் கொடுமை தாங்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒருவர் இறந்துப் போன சம்பவம் அரியானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள பரிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த அமீர் என்பவர் தன்னையும் தனது குடும்பத்தாரையும் மாமனாரும், நான்கு மைத்துனர்களும் கொன்று விடுவார்கள் என சந்தேகிப்பதாகவும், அதனால் இந்த முடிவை எடுத்ததாகவும் தனது தற்கொலையின்போது எழுதி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
Average Rating