ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்!!
Read Time:1 Minute, 0 Second
ராஜஸ்தான் மாநிலத்தில் ரெயில் நிலையத்திற்கு வந்திருந்த கர்ப்பிணி பெண், பிளாட்பாரத்திலேயே குழந்தையை பெற்றெடுத்தார்.
நிறைமாத கர்ப்பிணியான அவர் இன்று தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் டாவ்சா ரெயில் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. எழுந்து நடக்க முடியாத அளவுக்கு வலி ஏற்பட்டதால் பிளாட்பாரத்திலேயே படுத்துவிட்டார்.
உடனே, அருகில் இருந்த மற்ற பெண் பயணிகள் சூழந்து நின்றுகொண்டு உதவி செய்ய, அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அதன்பின்னர், தாயையும் குழந்தையையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
Average Rating