108–க்கு தினமும் 17 ஆயிரம் அழைப்புகள்: மதுபோதை… மன அழுத்தத்தால் தொடரும் மிரட்டல்கள்!!
108 கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 17 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள், சாலையோரமாக மரண படுக்கையில் கிடப்பவர்கள் ஆகியோரை மீட்பதற்கு பொது மக்கள் தினமும் 108–க்கு போன் செய்து அழைப்பு விடுக்கிறார்கள்.
ஆனால் 108 கட்டுப்பாட்டு அறைக்கு தேவையில்லாத மிரட்டல் போன்களும் அதிகம் வருகின்றன. குறிப்பாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கும் கோடை காலத்தில் சிறுவர்–சிறுமிகள், தங்களது பெற்றோரின் செல்போனை எடுத்து எதையாவது பேசி விட்டு வைத்து விடுகிறார்கள்.
அதே நேரத்தில் போதை ஆசாமிகளும் 108 நம்பருக்கு போன் செய்து எதுவுமே பேசாமல் இருப்பது, அல்லது சத்தமாக சிரிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். ஒருசிலர் வெடிகுண்டு மிரட்டலும் விடுக்கிறார்கள். அதே நேரத்தில் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களும் பிடிக்காததவர்களை மாட்டி விடுவதற்கும் அவர்களின் பெயரை சொல்லி மிரட்டலில் ஈடுபடுகிறார்கள்.
இதுபோன்ற செயலில் ஈடுபட்டு கணவரை சிக்க வைக்க முயன்ற ஆசிரியை ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். சிறுவர்கள் சிலரும் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Average Rating