இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தேடப்பட்டு வந்த மூவர் பாகிஸ்தானில் கைது!!
Read Time:1 Minute, 18 Second
போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் என, இலங்கை மற்றும் தாய்லாந்தில் தேடப்பட்டு வந்த மூவர் பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விஷேட பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைதாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
சந்தேகநபர்கள் வசமிருந்து ஒரு கிலோ 300 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தானின் கராச்சி நகரில் வைத்து கைதுசெய்யப்பட்ட இவர்கள் இலங்கை மற்றும் தாய்லாந்தில் நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
இதேவேளை போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட மற்றொருநபர் முன்னதாக இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Average Rating