கிண்டி அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது!!
கிண்டி சக்கரபாணி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் கீர்த்திவாசன், முத்துக்குமார். அதே குடியிருப்பின் காவலாளியாக இருப்பவர் ஆனந்தன். இவர் கீர்த்திவாசன் மற்றும் முத்துக்குமாரின் மகள்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தார்.
பின்னர் இருவரிடமும் பணம் கேட்டு மிரட்டினார். ஆளுக்கு தலா ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் மகள்கள் குளிக்கும் வீடியோவை இண்டர் நெட்டில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். கத்தி முனையிலும் பல முறை மிரட்டல் விடுத்தார். பணம் கொடுக்காவிட்டால் உங்கள் குடும்பத்தை இந்த குடியிருப்பில் வாழ விட மாட்டேன் என்று கூறினார்.
இதுபற்றி, கீர்த்திவாசன், முத்துக்குமார் இருவரும் கிண்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து காவலாளி ஆனந்தனை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அதே குடியிருப்பில் வசிக்கும் வின்சென்ட், ராஜகோபால் ஆகியோரின் தூண்டு தலின் பேரில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவித்தார்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த வின்சென்ட், ராஜகோபால் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
Average Rating