உத்தரபிரதேசத்தில் தொடரும் கொடூரம்: 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!!
Read Time:1 Minute, 15 Second
உத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுமி 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஜெய்தீரா பகுதியைச் சேர்ந்தவர் சுதா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஜூலை 4-ம் தேதி பள்ளியில் உள்ள மதிப்பெண் பட்டியலை பெறுவதற்காக தனது மாமாவுடன் சென்றுள்ளார். அப்போது அவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இந்நிலையில் காணாமல் போன சிறுமி சுதா நேற்று மாலை வீடு திரும்பினார்.
அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 4 பேர் கொண்ட கும்பல் சிறுமியை 8 நாட்களாக சீரழித்தது தெரியவந்ததது. இதனைத் தொடர்ந்து சுதா அளித்த தகவலின் படி, பானு என்பவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய மூன்று பேர் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Average Rating