ஊட்டியில் 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர்!!
ஊட்டில் இன்று கலெக்டர் சங்கர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி கொண்டு இருந்தார். அப்போது சென்னையை சேர்ந்த மகாலட்சுமி, கோத்தகிரியை சேர்ந்த ரோஜாமலர், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நந்தினி, சுமித்ரா, கிருபா, ஊட்டியை சேர்ந்த சுபாஷினி ஆகிய 6 இளம்பெண்கள் ஒன்றாக வந்து ஒரு மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
சென்னையை சேர்ந்த வாலிபர் ஜெகன் என்கிற ஜெகநாதன் என்பவர் எங்களை ஒருவருக்கு தெரியாமல், ஒருவரை சந்தித்து காதலிப்பதாக கூறி ஏமாற்றினார். இதை நம்பிய எங்களை திருமணம் செய்து கொண்டு எங்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து கொண்டு சென்று விட்டார்.
மேலும் அவர் இதே போல் வேறு பெண்களையும் ஏமாற்றி திருமணம் செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே அவரை பிடித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தனர்.
6 பெண்கள் திரண்டு வந்து ஒரு வாலிபர் மீது புகார் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating