மேற்கு வங்காளம்: ஜப்பான் மூளையழற்சி நோய் பாதிப்பால் சிறுவன் பலி!!
ஜப்பான் மூளையழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் இன்று பரிதாபமாக உயிரிழந்தான்.
பாக்டீரியா கிருமிகளின் தொற்றால் ஏற்படும் ஜப்பான் மூளையழற்சி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் தலைவலி, காய்ச்சல், சோர்வு, களைப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும். இந்த நோய் பரவுவதற்கு சுகாதாரமற்ற பன்றி பண்ணைகளும் ஒரு காரணம் என்று கருதப்படுகிறது.
மூளையழற்சி நோய் தீவிர நிலையை எட்டும்போது தசைவலிப்பு, இழுப்பு, உடல் நடுக்கம், நினைவாற்றல் இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேற்கு வங்காளத்தின் வடக்கு மாவட்டங்களை சேர்ந்த பலர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வந்த சிறுவன் இன்று உயிரிழந்துள்ளான். இந்த சிறுவனுடன் சேர்த்து கடந்த ஜனவரி மாதத்திலிருந்து மொத்தம் 24 பேர் மூளையழற்சி நோய்க்கு பலியாகியுள்ளனர்.
கொசுக்களால் ஏற்படும் கொடிய நோய்க்கு இந்த மாதத்தின் முதல் 14 நாட்களில் மட்டும் 14 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating