மாணவர்களிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி தலைமை ஆசிரியர் கைது!!
Read Time:1 Minute, 10 Second
நாகர்கோவிலை சேர்ந்தவர் வளன். இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மாரநாடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் அந்த பள்ளி மாணவர்களிடம் தவறாக நடக்க முயன்றதாக மாவட்ட கல்வி அதிகாரிக்கு புகார் வந்தது.
இதனைத்தொடர்ந்து அந்த பள்ளிக்குச் சென்ற மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி அப்துல் ரகீம் இதுகுறித்து பள்ளியில் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் மாணவர்களிடம் தவறாக நடக்க முயன்றது உண்மை என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வளனை, தொடக்க கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் குறித்து மானாமதுரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வளனை கைது செய்தனர்.
Average Rating