வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பம்!!
Read Time:57 Second
இம்முறை பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 09.30 அளவில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக, அரச அச்சகர் காமினி பொன்சேகா தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவால் அரச அச்சகத்திற்கு தேவையான அனுமதி நேற்று வழங்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு வாரங்களில் குறித்த வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடையலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating