ராஜித்த உள்ளிட்ட ஐவரின் கட்சி உறுப்புரிமை பறிபோகுமா?
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் சென்ற ஐவரை அக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.
கட்சி உறுப்பினர்களால் மத்திய செயற்குழுவிடம் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன்படி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டுள்ள, ராஜித்த சேனாரத்ன, ஹிரூணிகா பிரேமச்சந்திர, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, அர்ஜூன ரணதுங்க மற்றும் வடிவேலு சுரேஷ் ஆகியோரது உறுப்புரிமையை நீக்கும் படியே கோரப்பட்டுள்ளதாக, அவர் மேலும் கூறியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் இன்று நடைபெறும் என, அனுர பிரியதர்ஷன யாப்பாவால் அறிவிக்கப்பட்ட, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழுவின் கூட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating