பொலிஸாருடன் முரண்பட்டு தலைக்கவசத்தை பறித்துச் சென்ற பெண் விளக்கமறியலில் (வீடியோ)!!
Read Time:1 Minute, 12 Second
மாலபே பகுதியில் வைத்து இரண்டு பொலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரை எதிர்வரும் 28ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொகுசுக் காரில் பயணித்த பெண்ணொருவர் இரண்டு பொலிஸாருடன் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபடுவது போன்ற காணொளி ஒன்று இணையத்தில் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது வாகன அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொண்டதாலேயே அப் பெண் போக்குவரத்து பொலிஸாருடன் முரண்பட்டதாகத் தெரிகிறது.
பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்த பொலிஸாரின் தலைக்கவசத்தையும் பறித்துக் கொண்டு அப் பெண் செல்வது போன்ற காட்சிகளும் குறித்த காணொளியில் காணப்படுகின்றன.
அந்தக் காணொளி இதோ..!
Average Rating