பாகிஸ்தானில் 257 உஸ்பெகிஸ்தான் நாட்டினர் கைது
Read Time:57 Second
பாகிஸ்தான் நாட்டில் சாமன் பகுதி என்பது ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது. இங்கு அனுமதி இல்லாமல் வசித்த வெளிநாட்டினர் 257 பேர் கைது செய்யப்பட்டனர். சட்டத்துக்கு புறம்பாக குடியேறி உள்ள வெளிநாட்டினரை கைது செய்வதற்காக வீடுதோறும் சோதனை நடத்தப்பட்டது. இதில் முதலில் 20 உஸ்பெகிஸ்தானியர் கைதானார்கள். அதைத் தொடர்ந்து 237 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். எஞ்சியவர்கள் ஆப்கானிஸ்தானியர்கள் ஆவார்கள். கைதானவர்கள் அனைவரும் சாமன் நகர போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.