கேரளாவில் பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமரா பொருத்திய இளைஞர் கைது!!

Read Time:1 Minute, 40 Second

ddd1a49c-52ed-40d3-8f0f-98695dc36503_S_secvpfகேரளாவில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமராவை பொருத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொச்சியில் உள்ள துணிக்கடை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்த இளைஞர், பெண்கள் உடை மாற்றும் அறையில் செல்போன் கேமரா பொருத்தியதாக தெரிகிறது. இதனிடையே துணிக்கடையில் உடை மாற்ற முயன்ற பெண் ஒருவர், அறையில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும் இது குறித்து துணிக்கடை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த துணிக்கடையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலையில் சேர்ந்த ஷாஜகான் என்பவர் இச்செயலில் ஈடுபட்டார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவா சென்றிருந்தார். அப்போது அங்குள்ள பேப் இந்தியா கடையின் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை ஸ்மிருதி இரானி கண்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மொபைல் ஹெட்போன் வாங்கித் தராத அக்காவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தம்பி!!
Next post உடல் எடையைக் குறைக்க உதவும் ஆயுர்வேத டீ..!!!