உத்தரபிரதேசத்தில் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை!!
Read Time:1 Minute, 20 Second
உத்தரபிரதேச மாநிலம் முஷாபர்நகரில் விவசாயி ஒருவர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அங்குள்ள பாட்கலி கிராமத்தில் வசித்தவர் சச்சின் தியாகி(26). விவசாயியான இவர் கடந்த சில நாட்களாக மனச்சோர்வுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையி்ல் நேற்று துப்பாக்கியின் மூலம் தன்னைத் தானே சுட்டு சச்சின் தியாகி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த கொட்வாலி காவல் துறையினர், சச்சின் தியாகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
26 வயதான சச்சின் தியாகி தற்கொலை முடிவை தேடிக்கொண்டது அக்கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விவசாயின் தற்கொலை குறித்து கொட்வாலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating