5 நட்சத்திர ஓட்டலை வாடகைக்கு எடுத்து கடல் சிங்கத்துக்கு பர்த்டே பார்ட்டி கொடுத்த சீன கோடீஸ்வரர்!!
செல்லமாக வளர்க்கும் கடல் சிங்கத்துக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்காக சீனாவில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலை முழுமையாக வாடகைக்கு எடுத்து பர்த்டே பார்ட்டி கொடுத்த கோடீஸ்வரரைப் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சீனாவின் மிகப்பெரிய கோடிஸ்வரர்களில் ஒருவரான வாங் ஜியலின் என்பவரின் 30 வயது மகன் தான் வளர்க்கும் கடல் சிங்கத்தின் பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாட நினைத்தார். இதற்காக கடலோர நகரமான க்விங்டாவோவில் ஒஷன் ஸ்பிரிங் என்ற 5 நட்சத்திர ஓட்டலை முழுமையாக இரண்டு நாட்கள் வாடகைக்கு எடுத்துள்ளார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த ஓட்டலையே அமர்க்களம் செய்துள்ளனர். இவர்களுக்கென தனி சமையல்காரர் நியமிக்கப்பட்டு பர்த்டே ஸ்பெஷல் உணவும் பரிமாறப்பட்டது. இப்படியொரு ஜோடியைப் பார்த்து ஹோட்டல் ஊழியர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
சீனாவில் இவ்வாறு கணக்கில்லாமல் பணத்தை வாரி இறைப்பவர்களை ‘டுஹாவ்’ என்று கிண்டல் செய்வார்கள்.
Average Rating