9-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயற்சி: பள்ளி பிரின்சிபல் கைது!!
Read Time:1 Minute, 23 Second
பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாணவி, ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் அம்மாணவியின் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் தியோபாண்ட் பகுதியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார். இதை தூரத்தில் கவனித்த பொதுமக்கள் சிலர், அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பதறி அடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடி வந்த பெற்றோரிடம், சக மாணவர்கள் முன் பிரின்சிபல் தன்னை மோசமாக திட்டி அவமானப்படுத்தியதையும், தன் தலையை சுவற்றில் மோதி காயப்படுத்தியதையும் சொல்லி அழுதாள்.
இதைக் கேட்டு ஆவேசமடைந்த பெற்றோர்கள் உடனடியாக போலீசில் புகாரளிக்க, அந்த பிரின்சிபல் கைது செய்யப்பட்டுள்ளார்.
Average Rating