வவுனியாவில் புளொட் உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுக்கொலை…!

Read Time:1 Minute, 22 Second

ani_candil.gifதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சிரேஷ்ட அங்கத்தவர்கள் இரண்டு பேர் நேற்றிரவு வவுனியாவில் வைத்து புலிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தின் பிரதேசமான ஆசிகுளத்தை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிதம்பரப்பிள்ளை செல்வராஜா (வயது-50) மற்றும் வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தை வசிப்பிடமாகக் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான ரஞ்சன் என்றழைக்கப்படும் இருதயம் வேதராசா (வயது-40) ஆகிய இரண்டு பேருமே அவர்களது இல்லத்துக்குள் பிரவேசித்த புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் இருவரும் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் ரஞ்சன் எனும் இருதயம் வேதராசாவின் (19வயதான) மகள் தயாழினி என்ற யுவதி புலிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படையினர்!!
Next post ஈராக் மீதான துருக்கியின் படை நடவடிக்கை கடுமையான விளைவுகளை தோற்றுவிக்கும்