19 வயது இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை!!
19 வயது இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், வேலை தேடி டெல்லி வந்துள்ளார். அப்போது, அவரை சந்தித்த முன்னா என்பவர், வேலை வாங்கித் தருவதாக கூறி, அந்த பெண்ணை நொய்டா உள்ளிட்ட டெல்லியின் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பலாத்காரத்திற்கு உள்ளான அப்பெண் கர்ப்பம் அடைந்தது தெரிந்தும் தொடர்ந்து அவருக்கு முன்னா பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவில், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து முன்னாவை அங்குள்ள சிறைச்சாலையில் போலீசார் அடைத்தனர்.
Average Rating