ஒடுகத்தூர் அருகே தற்கொலைக்கு முயன்ற காதலிக்கு தாலி கட்டிய வாலிபர்!!
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடிமலை பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 19–பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வாலாஜாவில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
அவரும் ஒடுகத்தூரை சேர்ந்த 25 வயது நிரம்பிய குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் காதலித்து வந்தனர். ராணிக்கும் அசோக்குமாருக்கும் இடையே ஏதோ பிரச்சனை எழுந்ததாக தெரிகிறது.
இதில் ராணி மனவேதனையில் இருந்தார். நேற்று வீட்டில் இருந்த அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரையை சாப்பிட்டார். பின்னர் தான் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டதாக குமாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
பதறிப்போன குமார் உடனே ராணியின் வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு ராணி பாதி மயக்கத்தில் கிடந்தார். ராணி இறந்து போவாரோ என்று அவர் பயந்துபோனார். எனவே ராணி இறப்பதற்கு முன்பு அவரை தனது மனைவியாக்க குமார் நினைத்தார்.
இதைத்தொடர்ந்து ஒடுகத்தூர் சோளப்புரி அம்மன் கோவிலுக்கு ராணியை தூக்கி சென்றார். அங்கு ராணிக்கு குமார் தாலி கட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு ராணியை கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு ராணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating