புரசைவாக்கம் சீர்திருத்த பள்ளியில் இருந்து 14 சிறுவர்கள் தப்பி ஓட்டம்!!

Read Time:3 Minute, 2 Second

b7c88889-ba00-4626-a555-94f883a4221d_S_secvpfசென்னை புரசைவாக்கத்தில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் தங்கி உள்ளனர். சிறு சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட அவர்கள் திருந்துவதற்காக இந்த பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

குறிப்பிட்ட ஆண்டு காலம் வரை சீர்திருத்த பள்ளியில் இருக்கும் சிறுவர்கள் பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இந்த நிலையில் நேற்றிரவு சீர்திருத்த பள்ளியில் இருந்து 14 சிறுவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

100–க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கியுள்ள இந்த பள்ளியை வார்டன் விஜயகுமார் இன்று ஆய்வு செய்தார்.

அப்போது ஜெயக்குமார் (வயது 17) என்ற சிறுவன் தனது உறவினர் வாங்கி கொண்டு வந்த தின்பண்டம் வெளியில் இருப்பதாகவும், அதனை எடுத்துவர வெளியே விட வேண்டும் என்று கேட்டார்.

இதை நம்பி வார்டன் விஜயகுமார், ஜெயக்குமார் தங்கியிருந்த அறையை திறந்து விட்டார். சிறுவன் அறையில் இருந்து வெளியே வர அவனுடன் தங்கி இருந்த மேலும் 13 சிறுவர்கள் வெளியே வந்தனர்.

14 பேரும் சேர்ந்து வார்டனை அடித்து உதைத்து சிறுவர்கள் தங்கியிருந்த அறையில் வார்டனை தள்ளி பூட்டி சிறை வைத்து விட்டனர். பின்னர் அவர்கள் பள்ளியில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

சிறுவர்களின் தாக்குதலில் மயங்கி கிடந்த வார்டன் சிறிது நேரம் கழித்து தனது செல்போன் மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து அறையில் இருந்து வார்டனை வெயே மீட்டனர்.

தப்பி ஓடிய சிறுவர்கள் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த வர்கள் அயனாவரம் உதவி கமிஷனர் சங்கரன், தலைமை செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி ஆகியோர் சீர்திருத்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய சிறுவர்களை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர்.

தப்பி ஓடிய சிறுவர்கள் பெயர் வருமாறு:–

ஜெயக்குமார், ஜீவா, தமிழரசன், சுந்தர், அப்துல் கலாம், தாஸ், பாலாஜி, கார்த்திக், குமரன், மணி கண்டன், சுப்புராஜ், ஆண்டர்சன், ஒசன்னா, இன்னொரு பாலாஜி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரெயில் கொள்ளைக்கு வழிகாட்டிய காக்கா முட்டை: கைதான 5 கொள்ளையர்கள் பரபரப்பு வாக்குமூலம்!!
Next post செம்மரக்கடத்தலில் கணவர் கைது: மகளிர் சுய உதவிக்குழு தலைவி–மகள் விஷம் குடித்து தற்கொலை!!