மாமல்லபுரம் அருகே கல்லூரி மாணவி மாயம்!!
Read Time:1 Minute, 0 Second
ஜார்கண்ட் மாநிலம் நய்சராய் பகுதியை சேர்ந்தவர் குந்தன்பிரசாத் மகள் ரன்ஜி குமாரி (வயது21). மாமல்லபுரம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி பயோடெக் பிரிவில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கடந்த மே மாதம் 9ம் தேதி விடுதியில் இருந்து கல்லூரிக்கு சென்றவர் விடுதி திரும்பவில்லை. கல்லூரி நிர்வாகம் மாணவியின் வீட்டுக்கு தகவல் கொடுத்தது. அவர்கள் உறவினர், நண்பர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை.
தற்போது மாணவியின் தந்தை குந்தன்பிரசாத் மாமல்லபுரம் போலீசில் புகார் கொடுத்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating