குடிபோதையில் தவறி விழுந்த போது ஷோ–கேஸ் கண்ணாடி வெட்டி விவசாயி கழுத்து அறுந்து பலி!!

Read Time:1 Minute, 28 Second

a49d750f-e9d4-4616-8388-731c54c85e57_S_secvpfகோவை மேட்டுப்பாளையம் கோ–ஆப்பரேட்டிவ் காலனியை சேர்ந்தவர் பொன்ராஜ்(வயது 56). விவசாயி.

இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த பொன்ராஜ் வெகுநேரமாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். 10 மணி அளவில் அவரது மனைவி புவனேஸ்வரி சாப்பிட வருமாறு அழைத்தார். உடனே பொன்ராஜ் டி.வி.யை அணைக்கச் சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக டி.வி. அருகே இருந்த ‘ஷோ–கேஸ்’ மீது மோதினார். இதில் ‘ஷோ–கேஸ்’ கண்ணாடி உடைந்து பொன்ராஜின் கழுத்தை அறுத்தது. இதனால் அவர் அலறித் துடித்தார். சத்தம் கேட்டு அங்கு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்கள் பொன்ராஜை மீட்டு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்ராஜ் இறந்து விட்டார். இதுதொடர்பாக அவரது மனைவி புவனேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாமல்லபுரம் அருகே கல்லூரி மாணவி மாயம்!!
Next post 11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர் கைது!!