யாழில் மின்கம்பத்துடன் மோதிய வாகனம் – 14 பேர் காயம்!!

Read Time:1 Minute, 31 Second

801763668Untitled-1கன்டர் ரக வாகனம் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பிரதான வீதியில் தண்ணீர் தாங்கிக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சிலர் கிளிநொச்சியில் கொங்கிறீற் வேலை முடித்து விட்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தவேளை, பிரதான வீதி வழியாக செல்லும் போது, வாகன சாரதிக்கு தூக்கக் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது வாகனத்தை அவர் மின் கம்பம் ஒன்றில் மோதியுள்ளார்.

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த 14 நபர்களும் சிறு காயங்களுக்குள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாக்காளர் அட்டைகள் 29ம் திகதி தபால் திணைக்களத்திடம்!!
Next post சட்டவிரோத மதுபான விற்பனை – சுற்றுலா ஹோட்டல் சுற்றிவளைப்பு!!