கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய சங்க பிரதிநிதிகள் நாளை வருகை!!
Read Time:1 Minute, 8 Second
எதிர்வரும் பொதுத் தேர்தலின் கண்காணிப்புப் பணிகளுக்காக மூன்று சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஐரோப்பிய சங்கம், பொதுநலவாய நாடுகளின் சங்கம் மற்றும் தெற்காசிய கண்காணிப்பாளர்கள் வலையமைப்பின் பிரதிநிதிகளே இவ்வாறு கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் இம்முறை தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்காக 110 வௌிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வரவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கண்காணிப்பு நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும் ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் நாளை நாட்டுக்கு வருகைதரவுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையளவில் தமது கண்காணிப்புப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளனர்.
Average Rating