விபத்தில் பெண் பலி – நால்வர் படுகாயம்!!
Read Time:1 Minute, 4 Second
இறம்பொடை – புலூபீல்ட் (பலாகொள்ள) பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, நால்வர் காயமடைந்துள்ளனர்.
இன்று (19) கண்டியில் இருந்து பண்டாரவளை நோக்கிச் சென்ற கெப்ரக வாகனம் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணித்த ஐவரில் ஒரு பெண் மரணமடைந்துள்ளதோடு அவரது சடலம் கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனைய நால்வரும் காயமடைந்த நிலையில் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரனைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating