மேற்கு வங்காளத்தில் சிறுமியை கற்பழித்து கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசிய கொடூரம்!!

Read Time:1 Minute, 54 Second

aa8ed3a1-c7a3-4b40-9f0d-d099cb4d3285_S_secvpfமேற்கு வங்காளத்தில் 14 வயது சிறுமியை கற்பழித்த பின்னர், கொலை செய்து ஆற்றில் தூக்கி வீசிய கொடூரம் நடந்தேறியுள்ளது.

இங்குள்ள வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை என்று அவளது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் அச்சிறுமியை இரண்டு நாட்களாக தேடிவந்தனர்.

இந்நிலையில் இன்று அங்குள்ள குலிக் ஆற்றின் கரையில் சிறுமியின் உடல் ஒன்று கிடப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது, இறந்துபோனது காணாமல் போன சிறுமி என்பது உறுதியானது.

இச்சிறுமி கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், 20 வயது இளைஞர் ஒருவர், 7-ம் வகுப்பு படித்து வந்த இந்த சிறுமியை கற்பழித்து பின்னர் கொலை செய்தது தெரியவந்தது. உடனே, போலீசார் அந்த இளைஞனை கைது செய்தனர்.

கைதான இளைஞனை போலீசார் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றனர்.

இளைஞனிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை கற்பழித்து கொலை செய்ததை தனது வாக்குமூலத்தில் தெரிவித்தான் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபத்தில் பெண் பலி – நால்வர் படுகாயம்!!
Next post பெண்களின் பிரச்சனைக்கு பிரதமரின் செல்பி வித் டாட்டர் தீர்வளிக்காது: பிரபல நடிகை கருத்து!!