பெண்களின் பிரச்சனைக்கு பிரதமரின் செல்பி வித் டாட்டர் தீர்வளிக்காது: பிரபல நடிகை கருத்து!!
பெண்களின் பிரச்சனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் ‘செல்பி வித் டாட்டர்’ தீர்வளிக்காது என்று பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா ஜாதா கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தடுக்க, ‘செல்பி வித் டாட்டர்’ என்ற இணையதள பிரச்சாரத்தை மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் உள்பட பல்வேறு பிரபலங்கள் தங்கள் மகள்களுடன் செல்பி புகைப்படங்களை எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்தனர். பொதுமக்களிடையே மிகச்சிறந்த வரவேற்பை பெற்ற இத்திட்டத்தை பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா ஜாதா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூருவில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,”பெண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் வரதட்சனை கொடுமை, பாலியல் தொல்லை, கேலி போன்ற துன்பங்களில் இருந்து, பிரதமரின் ‘செல்பி வித் டாட்டர்’ பாதுகாக்காது. பெண்களை பாதுகாப்பதில் ‘செல்பி வித் டாட்டர்’ ஒரு சிறந்த தொடக்கம் என்றாலும் இது நகர்புற பகுதிகளுக்கான தொடக்கமாகவே கருதுகிறேன்’’ என்றார்.
முன்னதாக பிரதமர் மோடி தொடங்கி வைத்த இத்திட்டம் வடஇந்தியாவில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அரியானாவின் பல பஞ்சாயத்துகளில் உள்ள வீடுகளில் பெண் குழந்தையின் பெயர், ஈமெயில் முகவரி அடங்கிய பெயர் பலகை அக்கிராம மக்களால் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating